ஆண்டுக்கு ஒருமுறை குரு பகவான் பெயர்ச்சி அடைவார். அதிலும் இவ் ஆண்டு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்துக்கு வந்துள்ளார். குரு உச்சமடையும் ராசி குரு பகவான் தான்.
அதேசமயம், மற்ற கிரஹங்களின் சேர்க்கை, குருபகவானின் விசேஷப் பார்வைகள் பதியும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் பலன்கள் ராசிகளுககு கணிக்கப்படும்.
இந்தப் பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிவிட்டார்.
ஆனால், திருக்கணிதப்படி இன்று (2.6.2026) பெயர்ச்சி ஆகிறார். அதன்படி 12 ராசிக்கும் பலன்கள் கணிக்கப்படும். அதில் ஐந்து ராசிகளுக்கு பலன்கள் பலன்கள் கூறப்பட்டுள்ளது.
மேஷம்
நினைத்த காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
நண்பர்கள் மற்றும் உடனிருப்போரின் ஆதரவு கிடைக்கும்.
திடீர் பயணங்கள் மூலம் நன்மைகள் ஏற்படலாம்.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
சுபகாரியத் தடைகள் நீங்கி நல்ல நிகழ்வுகள் நடைபெறலாம்.
வருமானம் இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கலாம்.
சேமிப்பில் கவனம் தேவை. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
பிள்ளைகள் அல்லது வாரிசுகளால் பெருமை கிடைக்கும்.
தொழிலில் நேரடி கவனமும் ஈடுபாடும் அவசியம்.
ரிஷபம்
திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றமும் நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
பணியிடத்தில் நேரம் தவறாமை மற்றும் ஒழுங்கு முக்கியம்.
உடனிருப்போரின் குறைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. பணி தொடர்பான சில பயணங்கள் தடைபடலாம்.
அது நன்மைக்கே அமையலாம்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமானாலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடப்பது அவசியம். புதிய உறவுகளிடம் தேவையற்ற கடுமையைத் தவிர்க்க வேண்டும்.
வாரிசுகள் தொடர்பான சுப நிகழ்வுகள் நடைபெறலாம்.
மிதுனம்
கடின உழைப்பால் முன்னேற்றமும் உயர்வும் கிடைக்கும்.
பணியிடத்தில் பாராட்டு மற்றும் அங்கீகாரம் பெறுவீர்கள்.
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.
ஆடை, ஆபரணம், சொத்து சேர்க்கை உண்டாகும்.
பண விஷயங்கள் மற்றும் ஆவணங்களில் கவனம் தேவை.
கண், முதுகு, அலர்ஜி பிரச்சினைகளில் எச்சரிக்கையாக இருங்கள்.
கடகம்
பணியிடத்தில் உயர்வு, பாராட்டு கிடைக்கும்.
புதிய வேலை வாய்ப்புகள் அமையலாம்.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒற்றுமை உருவாகும்.
உறவினர்களிடையே செல்வாக்கு உயரும்.
கழுத்து, மூட்டு, பல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றமும் பெருமையும் கிடைக்கும்.
பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
நீண்டநாள் ஆசைகள் நிறைவேறத் தொடங்கும்.
வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறலாம். பெற்றோரின் உடல்நிலை மேம்படும்.
உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும்.
தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும்.
இடுப்பு, காது, மூக்கு, தொண்டை ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
சிந்தித்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வாய்ப்பு உள்ளது.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறலாம்.
விட்டுக்கொடுத்துச் சென்றால் நிம்மதி அதிகரிக்கும்.
பெற்றோர் உடல்நலத்தில் கவனம் அவசியம்.
மன அழுத்தம், தலைவலி, நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.