10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி
ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.