ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்வி செயலாளர், எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.