வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த நிவாரண சேவை அதிகாரி  இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு  உயிரிழந்ததாக, அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 144 குடும்பங்களைச் சேர்ந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 236 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.