வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி : பொலிஸ் சாரதிக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்-

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய்-(வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பயணித்த இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனத்தின் பொலிஸ் சாரதியை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து பொலிஸ் சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி பொலிஸ் சாரதிக்கு விளக்கமறியல்
வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி பொலிஸ் சாரதிக்கு விளக்கமறியல்