வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு

வீடொன்றில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி, சங்கரத்தை என்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

76 மற்றும் 73 வயதுடைய குறித்த இரண்டு வயோதிப பெண்கள் மாத்திரமே அவ் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளாததால் கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.