பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய இலங்கை சுங்கத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள பசுமை வழித்தடம் (Green Channel ) வழியாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் ஒரு பெரும் தொகையை நாட்டிற்குள் கடத்த முயன்ற 18 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சரக்கின் மதிப்பு சுமார் ரூ. 31.38 மில்லியன் என்றும், அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 அட்டைப் பெட்டிகள் இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் 16 சீன நாட்டினரும், இரண்டு இலங்கை நாட்டினரும் அடங்குவர்; இவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் துபாய் மற்றும் கோலாலம்பூரிலிருந்து எமிரேட்ஸ், ஏர்ஏசியா, மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் படிக் ஏர் விமானங்களில் சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
சுங்கத்துறையின் தகவல்படி, குறித்த சிகரெட்டுகள் 27 பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பயணிகள் அறிவிப்பு செய்யத் தேவையில்லாத பசுமை வழித்தடம் (Green Channel ) வழியாக அவை கொண்டு வரப்பட்டன.
விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் சந்தேக நபர்களும் கடத்தல் பொருட்களும் கைப்பற்றப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.