விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகொப்டர் நேற்று வெள்ளிக்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளது.

எம்.ஐ. வகையை சேர்ந்த குறித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதுடன் விமானப்படை வீரர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படைத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்