வாகன விபத்து: இளைஞன் மரணம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்