-பதுளை நிருபர்-
எல்ல கிதல்எல்ல வனப்பகுதியில் பாரிய அளவு காட்டுத்தீ பரவி வருவதாக எல்லா பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரையில் சுமார் பத்து ஏக்கருக்கு மேல் குறித்த வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தீயை அணைப்பதற்கு இராணுவத்தினரின் உதவியை நாடி உள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் கடுமையான காற்றின் காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.