-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையைத் தூய்மைப்படுத்திப் பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் நேற்று சனிக்கிழமை கடற்கரை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமதானப் பணிகளை மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் தலைவர் வைத்தியர் கே.முரளிதரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கல்லடி கடற்கரைப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பிளாஸ்டிக் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் என்பன அகற்றப்பட்டன.
பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அகற்றும் நிகழ்வில் மட்டக்களப்பு சிகரம் றோட்டறிக் கழக உறுப்பினர்கள், சாரணர் மாணவர்கள், விளையாட்டுக் கழகம், கல்லடி முதியோர் சங்கத் தலைவர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விதம் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை மட்டக்களப்பு மாநகரசபை கழிவகற்றும் பணியாளர்கள் தமது வாகனங்களில் பெற்றுச் சென்றனர்.