ரயில் கடவையில் விபத்து : 6 பேர் படுகாயம்

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது

குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில், ஜீப் ஒன்றுடன் ரயில் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.