ரயிலுடன் கார் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அரியாலையில் சற்று நேரத்திற்கு முன் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக சில மணி நேரம் புகையிரத தடைப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.