மே 9 சம்பவம் தொடர்பில் அம்பாறையில் 33 பேர் கைது

மே 9 சம்பவம் தொடர்பில் அம்பாறையில் இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தமை மற்றும் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அம்பாறையில் இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.