மின்சார கட்டணம் 18 விகிதம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்த போதிலும் இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 14 விகிதம் மின்சார கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை கூட்டம் நடத்திய போதிலும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் கலைந்து சென்றதுடன் இன்று வியாழக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன