மின் கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் அவர்கள் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.