மஹிந்தானந்தவின் அலுவலகத்தின் மீது கல்வீச்சு

நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவின் அலுவலகத்துக்கு  முன்பாக டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை அப்பிரதேச வாசிகள் நடத்தியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இதனால் அலுவலகம் சேதமடைந்த நிலையில்,  பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளனர்.