மரணச் சடங்குக்கு சென்றுவிட்டு வந்து குளித்துக்கொண்டிருந்த பூசகருக்கு நேர்ந்த பரிதாபம்!

-யாழ் நிருபர்-

வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் (வயது 52 ) என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குறித்துக்கொண்டு இருந்தவேளை, கால்தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்தார், அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்