மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான வழக்கு

 

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான இரண்டு வழக்குகள்  இன்று புதன்கிழமை ஏறாவூர் நீதிமன்றில். எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் – பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சுற்றுலா நீதிமன்ற நீதிபதி செல்வி.தர்சினி அன்னாத்துறை முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது எதிர்வரும் மார்ச் மாதம் 04 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைக்கு தீர்வு கோரி சித்தாண்டியில் இடம்பெறும் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சித்தாண்டி பகுதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 04 ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.