மன்னாரில் ஆரம்பமானது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

-மன்னார் நிருபர்-

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய  செயற்குழு    கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள்,உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.