மட்டு.காந்தி பூங்காவில் கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் நேற்று திங்கட்கிழமை மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயித்தியமலை-மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் கைது செய்து மட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய, நேற்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த சந்தேகநபர் கஜ முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட வேளை விசேட அதிரடிப்படையினர் அவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்