மட்டக்களப்பு பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

பாலமுனை கடற்கரையோரம் இன்று மதியம் 12 மணியளவில் கரை ஒதுங்கிய குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் எவ்வாறு மரணமானார் என்பது குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது காத்தான்குடி பாலமுனை கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்