மட்டக்களப்பு உள்ளிட்ட பல கடற்பரப்புகளுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் (திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில்) நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக புயலாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு டிசம்பர் 8-ஆம் திகதிக்குள் தென்மேற்கு வங்கக் கடலில் வட-தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையை நெருங்கக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும்.

மன்னாரிலிருந்து காங்கனசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.