கம்பகா மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரால் வழங்கப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 27 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகள் மற்றும் 12 ஆண் மாணவர்கள் உட்பட இருபத்தேழு பேர் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் மூன்று விபச்சாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க ஹோமாகம உடுவான பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 45,000 ரூபாய் வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் அவரது இருபத்தி இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருந்து இடம்பெற்றது.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் நால்வர் வாடகைக்கு எடுத்த காரில் விருந்துக்கு போதைப்பொருள் கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.
இதன்போது 20 மில்லிகிராம் ஹஷிஸ் போதைப்பொருள், வேகன் ஆர் ரக கார், மூன்று போதைப்பொருள், மூன்று கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கஹதுடுவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.