புகையிரதம் மோதி 50வயதுடைய நபர் பலி

-பதுளை நிருபர்-

புகையிரதம் மோதி 50வயதுடைய நபர் பலி

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இதழ்கஸ்ஹின்ன பகுதியில் புகையிரத பாதையில் நடந்து சென்ற 50 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டுயிருந்ந ரயிலில் மோதி பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் உடுபில்தன்ன இதழ்கஸ்ஹின்ன எனும் ஊரைச் சேர்ந்த நபர் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்