பிரசவத்தில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் உயிரிழப்பு

இந்தியாவில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் மகப்பேறு மருத்துவர் பிரசவத்தில் உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த அஞ்சுதா (வயது – 26) என்ற மகப்பேற்று மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மருத்துவர் அஞ்சுதாவுக்கு நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டதுடன் மூச்சுத்திணறலும் அதிகமானதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருப்பை குழாயில் இரத்தப்போக்கு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்