பாதுகாப்பு கருதி கட்சித் தலைவர்களின் கூட்டம் ரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலை காரணமாக நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே விசேட பாராளுமன்ற அமர்வு கூட்டப்படும் எனவும், சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் இன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.