பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் ஐஸ் போதைப் பொருள் விற்பனை : பெண் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள பாடசாலையொன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் ஐஸ் பொதிகள் மற்றும் 38 போதைப் பொருள் அடங்கிய 7 பொதிகளுடன் 42 வயதுடைய பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான பெண் பாடசாலை சிற்றூண்டிச்சாலையை நடத்தி வருவதாக தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்டவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.