பழைய பத்திரிகைகள் கொள்ளை

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 1486 கிலோகிராம் நிறையுடைய பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெள்ளவத்தை மெனிங் பொது சந்தையின் நான்காவது மாடியில் குறித்த வர்த்தக நிலையம் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கொள்ளை தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்