பஞ்சபூதங்களை கனவில் கண்டால்

பஞ்சபூதங்களை கனவில் கண்டால்

பஞ்சபூதங்களை கனவில் கண்டால்

⚪🔵🟠கனவு என்பது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும். எந்த மாதிரியான கனவுக்கு என்ன பலன்கள் ஏற்படும் என்று பெரியோர்கள் முற்காலங்களில் சொல்லி வைத்துள்ளனர். அந்த வகையில் பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

நிலம் கனவில் வந்தால்
  1. நிலநடுக்கம் வந்தது போல கனவு கண்டால் நீங்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
  2. பசுமையாக இருக்கும் வயலை கனவில் காண்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்க போவதன் அறிகுறியாகும்.
  3. நீங்கள் மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஒரு பெரிய ஆபத்து உங்களை நோக்கி வருகிறது என்று அர்த்தம்.
  4. மலை ஏறுவது போல கனவு வந்தால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்று அர்த்தம்.
நீர் கனவில் வந்தால்
  1. கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவீர்கள் என்று பொருள்.
  2. மழை கனவில் வந்தால் மகிழ்ச்சியான செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.
  3. அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் மிகுந்த பணவரவு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  4. நதியை கனவில் கண்டால் நமக்கு ஏற்பட்டிருந்த துன்பம் அனைத்தும் விரைவில் ஓடி விடும் என்று பொருள்.
  5. குளத்து நீரில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், உங்களின் தரித்திரம் விலகி உங்களிடம் புது உற்சாகம் ஏற்படும் என்று அர்த்தம்.
  6. கிணறு கனவில் வந்தால் மிகவும் நல்லதாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். திருமணம் ஆனவர்களாக இருந்தால் அவர்கள் குடும்பத்தில், வேறு யாருக்காவது திருமணம் நடைபெறும் என்று அர்த்தம்.
  7. தண்ணீரில் மூழ்குவது போல கனவு வந்தால், உங்களின் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  8. உங்கள் கனவில் கடல் வந்தால், வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாகும். மேலும் வெளிநாட்டவருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு செல்வம் பெருகும்.
காற்று கனவில் வந்தால்
  1. தென்றல் வீசுவது போல கனவு வந்தால், உங்களின் எல்லா விருப்பங்களும் நிறைவேறும் என்று அர்த்தம்.
  2. பனி பெய்வது போல கனவு கண்டால் உங்களுக்கு துன்பம் வரபோகிறது என்று அர்த்தம்.
  3. புயல், காற்று, சூறாவளி ஆகியவை வருவது போல கனவு வந்தால் நோய்கள் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
நெருப்பு கனவில் வந்தால்
  1. நெருப்பு கனவில் வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
  2. தீ மிதிப்பது போல் கனவு கண்டால், பெரும் சிக்கலில் மாட்ட போகிறீர்கள் என்று பொருள்.
  3. தீபம் கனவில் வந்தால் உடல்நலம் சீராகும் என்று அர்த்தம்.
  4. நெருப்பு பற்ற வைப்பது போல கனவு வந்தால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்பை நழுவவிட போகிறீர்கள் என்று அர்த்தம்.
  5. விளக்கு எரிவது போல கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  6. சூரியன் கனவில் வந்தால் உடல்நல கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்பட போகிறது என்று அர்த்தம்.
  7. தீ பிடித்து விட்டது போல கனவு கண்டால் கெட்ட செய்திகள் வரபோகிறது என்று அர்த்தம்.
  8. ஓமகுண்டம் கனவில் வந்தால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று அர்த்தம்.
ஆகாயம் கனவில் வந்தால்
  1. நட்சத்திர கூட்டத்தை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும் என்று அர்த்தம்.
  2.  வானில் நட்சத்திரத்தை கனவில் கண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று அர்த்தம்.
  3. நிலா வானில் பிரகாசமாக இருப்பது போல கனவு கண்டால் செய்யும் தொழிலில் லாபம் அதிகம் உண்டாகும் என்று அர்த்தம்.
  4. மின்னல் கனவில் வந்தால் தொழில் முன்னேற்ற பாதையில் செல்ல போகிறது என்று அர்த்தம்.
  5. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
  6. இடியுடன் மழை பெய்வதைப் போல கனவு கண்டால், சொந்தங்கள் விரோதிகள் ஆவார்கள்.
  7. சிவந்த வானத்தை கனவில் கண்டால் கண்டால் நல்லதல்ல.
  8. மேகக்கூட்டம் கனவில் வந்தால் நீங்கள் சோதனையான காலகட்டத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.
  9. நீல நிற வானம் கனவில் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம்.

பஞ்சபூதங்களை கனவில் கண்டால்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்