இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.சுமந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது, என இரா.சாணக்கியன் தெரிவித்தார்.