நீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-எத்தாபெதந்திவெவ பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

எத்தாபெதந்திவெவ பகுதியைச் சேர்ந்த சனுக பாசன (வயது – 14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

தாய் உயிரிழந்துள்ளதாகவும் தந்தை பிள்ளைகளை விட்டுச்சென்று வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் குறித்த சிறுவன் தனது மாமாவின் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் வேளாண்மை செய்வதற்காக நீர் தொட்டியில் நெல் போடப்பட்டிருந்ததாகவும் அதற்குள் இறங்கி விளையாடிக்கொண்டிருந்த போது விழுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சிறுவனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருப்பதாகவும், தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்