நீரில் மூழ்கிய நான்கு மாணவர்கள் : இருவர் சடலமாக மீட்பு

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியா – தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

இருவர் ஆபத்தான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.