நீண்ட நாள் கொள்ளையர்கள் பொலிஸாரால் கைது

யாழில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைதான நபர்கள் வழிப்பறியில் கொள்ளையடித்த நகைகள் அடகுவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.