நாளை பேருந்து சேவை இடம்பெறுமா?

நாளை செவ்வாய்க்கிழமை பஸ் போக்குவரத்து இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக இன்று திங்கட்கிழமை மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும், என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.