நாயுடன் உடலுறவு கொண்ட இளைஞன்

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் இளைஞர் ஒருவர் நாயுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார்.  அவர் வசிக்கும் 3வது மாடியில் இருந்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அண்டை வீட்டார் வந்து பார்த்த போது அந்த வாலிபர் வீட்டின் பால்கனியில் வைத்து நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட அண்டை வீட்டார் அபாய அலாரத்தை ஒலிக்கச் செய்துள்ளனர்.

இதனால் அந்த வாலிபர் நாயை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாயைப் பார்த்த போது அது ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள், அந்த வாலிபர் மீது பொலிஸில் புகார் செய்தனர். அத்துடன் நாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து அந்த வாலிபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (எந்தவொரு ஆண்இ பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையின் ஒழுங்குக்கு எதிரான உடலுறவு) கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுஇ

அதே நேரத்தில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர்   கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் பீட்டா 2 பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாளர் வினோத் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட போது அந்த வாலிபர் போதையில் இருந்ததாக மிஸ்ரா கூறினார். இந்த சம்பவம் கிரேட்டர் நொய்டா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்