நாட்டை பொறுப்பேற்க நாம் தயார் – சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

நாட்டை பொறுப்பேற்க தாம் தயாராகவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல தாம் வழி வகுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.