எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட, வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்படும் அன்று, வேட்புமனுவுடன் அவர்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உறுப்புரை 99 A இன் படி, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளையும் தமது வேட்பு மனுவுடன் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுப் படிவத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறுவது அபராதத்துடன் கூடிய குற்றமாகும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.