தெதுறு ஓயாவை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, பிங்கிரிய, பல்லம மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்