கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் அதிக அளவு பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவம் கேட்டுக்கொள்கிறது.
தலதா மாளிகைக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குவதைக் கருத்தில் கொண்டு இராணுவம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது.
தலதா கண்காட்சி நடைபெறும் காலத்தில், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள வளாகத்தின் பாதுகாப்பிற்காகவும், வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.
பெரிய பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், யாத்ரீகர்கள், இதில் கவனம் செலுத்தவில்லை என்று இராணுவம் தெரிவிக்கிறது.