கொரிய சுற்றுலாப்பயணி பண்டாரவளை சுற்றுலா பொலிஸ் பிரிவில் முறைப்பாடு

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை பகுதியில் நேற்று புதன்கிழமை கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரின் கைப்பை காணாமல் போயுள்ளதாக சுற்றுலா பயணி பண்டாரவளை சுற்றுலா பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரிய பிரஜை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நுவரெலியா ஹோர்டன் பகுதியில் இருந்து ஹப்புத்தளை நகருக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை விட்டு இறங்கிய போது கைப்பையை காணவில்லை எனவும் குறித்த பையில் 12500 இலங்கை நாணயம், கொரிய தேசிய அடையாள அட்டை, 03 இலத்திரனியல் வங்கி அட்டைகள் உள்ளிட்டவை இருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை சுற்றுலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.