குக்கிராமத்தில் இருந்து சாதித்த கிளிநொச்சி மாணவன்

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 2022 ஆம் ஆண்டுக்கான தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம் பெற்று வருகிறது.

இந்நிலையில், கிளிநொச்சி முழங்காலில் மகாவித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் சுமன் கீரன், 20 வயதிற்குட்பட்ட பிரிவில் 800,1500,5000 ஆகிய மூன்று நெடுந்தூர ஓட்டத்திலும் முதலிடத்தை பிடித்து சாதித்துக்காட்டினார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பயிற்சியினை மேற்கொண்டு வந்ததாகவும் தேசிய மட்டத்தில் சாதிப்பதே தன்னுடைய இலக்கு எனவும் தெரிவித்திருந்தார்