கற்பிட்டி – பொத்துவில் வரையான கடற்பரப்பு தொடர்பில் எச்சரிக்கை

கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை கடல் அலை மேலெழக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

இதன்படி, குறித்த கடற்பரப்பில் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையான உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்