கந்நக்காட்டில் மோதல்: 19 பேர் காயம், 60 பேர் மாயம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதலின் போது 19 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் 60 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்