ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் (தமிழ்)  ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்  இன்று  வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உமாச்சந்திரா பிரகாஷ்  ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளர்களில் ஒருவராகவும், ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தைஇ கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞசித் மத்தும பண்டார,  உமாச்சந்திரா பிரகாஷிடம் கையளித்தார்.