குருநாகல் அனுராதபுரம் பிரதான வீதியில் எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வாரியபொல நகருக்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.