ஊடகத்தில் படம் காட்டாமல் நாம் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்கவுக்கு பகிரங்க சவால் விடுவதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
கதரகம பகுதியில் தனது சகோதரர் மூலம் பார் பேர்மிட் பெற்றதாக வசந்த சமரசிங்க பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார், அது அப்பட்டமான பொய், எனக்கோ எனது குடும்பத்தினரக்கோ பார் பேர்மிட் இல்லை.
தற்போது உங்கள் ஜனாதிபதி,பிரதமர் உள்ளார்கள் , உங்களது அரசு உள்ளது ஊடகத்தில் வந்து படம் கட்டாமல் நாம் தவறு செய்திருந்தால் எம்மை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.
எதிர்கட்சி அரசியலை ஆளும் கட்சியில் இருந்து செய்யவேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.