உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை தன்ஜன்தென்ன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யுக்திய விஷேட சுற்றிவளைப்பின் போது பலாங்கொடை கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்ஜன்தென்ன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை கல்தொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்