இன்றோடு 50 வது நாளை எட்டியுள்ள காலி முகத்திடல் போராட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமையுடன் 50 ஆவது நாளை எட்டியுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதிப் போராட்டம் கடந்த ஏப்ரல் 50 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து, கடந்த 9 ஆந் திகதி இடம்பெற்ற கலவர சம்பவங்களை தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார்,  நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது, என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.