இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

இலங்கை மக்களுக்கு இந்த உயிர்ந்த ஞாயிறு தினமானது ஒரு கவலைக்குரிய நாளாக மாறிவிட்டிருக்கின்றது.

இறைவன் உயிர்ந்த நாளில் பல உயிர்கள் பலியாகிய துயரம் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில்இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.